இந்தோனேஷியாவில் பலி 4,700 ஆக உயர்வு
ஹொக்சியூமாவே (இந்தோனேசியா):
இந்தோனேஷிய நாட்டில் நில நடுக்கத்தால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4,700யைத் தாண்டிவிட்டது.இந் நிலையில் அந் நாட்டை இன்று 65 முறை நில நடுக்கம் தாக்கியது.
தாய்லாந்தில் 2 இந்தியர்கள் உள்பட 840 பேர் கடல் கொந்தளிப்புக்கு பலியாகியுள்ளனர்.
நில நடுக்கம் ஏற்பட்ட கடல் பகுதிக்கு அருகில் இருந்த இந்தோனேஷிய நாட்டின் சுமத்ரா தீவு தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.இங்கு சுமார் 50,000 மக்கள் வீடுகள் இழந்துள்ளனர். 4,700 பேர் பலியாகியுள்ளனர்.
இந் நிலையில் அங்கு இன்று காலை முதல் 65 முறை லேசானது முதல் அதிக சக்தி வாய்ந்தது வரையிலான நில நடுக்கங்கள் தாக்கின. பெரியநில நடுக்கம் ஏற்படும்போது இதுபோன்ற சில தொடர் நடுக்கங்கள் தாக்குவது இயற்கை தான் என அந் நாட்டு புவியியல் ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.
தாய்லாந்தில்:
தாய்லாந்தில் கடல் அலைகளுக்கு 840 பேர் பலியாகியுள்ளனர். இதில் 2 பேர் இந்தியர்கள் என்று தெரியவந்துள்ளது. இதில் ஒருவர்ஆந்திராவைச் சேர்ந்தவர் ஆவார்.












Click it and Unblock the Notifications