சுடுகாடான நாகை மாவட்டம்: 3,000 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டனம்:

கடலோர மாவட்டமான நாகப்பட்டனம், கடல் கொந்தளிப்பினால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில்மட்டும் 3,000 பேர் வரை இறந்திருக்கிறார்கள்.

Bodies lying in Nagai hospitalநாகை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றிலும் கடல் நீரில் மூழ்கி விட்டன. வேளாங்கண்ணி மாதா கோவிலில்தண்ணீர் புகுந்து சூழ்ந்துள்ளது. வேளாங்கண்ணிக்க்கு கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி சுற்றுலா வந்த 500 சுற்றுலாப் பயணிகளைக்காணவில்லை.

பெங்களூரிலிருந்து வேளாங்கண்ணி கோயிலுக்கு டாடா சுமோ காரில் சுற்றுலா வந்தவர்கள், காருடன் கடலுக்குள் தூக்கிவீசப்பட்டு பலியாயினர். கடலோர மணல் பரப்புகளில் பலர் உயிருடன் புதைந்து உயிரிழந்துள்ளனர்.

பூம்புகாரை ஒட்டியுள்ள பல்வேறு கிராமங்கள் தண்ணீல் மூழ்கி விட்டன. அப்பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்குடும்பங்கள் பலியாகி விட்டன.

நாகை மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுதிருவாரூரிர், மயிலாடுதுறைக்குக் கொண்டு வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் முழுவதும் எங்கு பார்த்தாலும் கடல் நீரும், பிணமாக பெரும் சோகத்துடன் காணப்படுகிறது.

மீட்பு பணிகள் பாதிப்பு:

இதற்கிடையே இன்று காலை பெய்த மழை காரணமாக நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+