For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை துறைமுகத்துக்கு ரூ. 10 கோடி இழப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Chennai coastal areaகடல் கொந்தளிப்பு காரணமாக சென்னை துறைமுகத்திற்கு ரூ. 10 கோடி வரையிலான சேதம் ஏற்பட்டுள்ளது.

துறைமுகத்துக்கு வந்த 5 சரக்குக் கப்பல்கள் சேதமடைந்துள்ளன. கடல் அலைகளால் இவை ஒன்றுடன் ஒன்று மோதி உடைந்தன.துறைமுகத்தில் நிறுவப்பட்டுள்ள சில கிரேன்களும் சேதமடைந்துள்ளன. கப்பல் நிறுத்துமிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜெம் ஆப் தூத்துக்குடி என்ற கப்பல் உடைந்ததில், அதில் வைக்கப்பட்டிருந்த 2,000 டன் சர்க்கரை கடலில் கொட்டியது. இதன் மதிப்பு ரூ 30லட்சம் இருக்கும்.

துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 5 ஊழியர்கள், ராட்சத கடல் அலைகளைப் பார்த்து பதறி அடித்துஓடியதில் கீழே விழுந்து காயமடைந்தனர், சில ஊழியர்கள் மூர்ச்சை அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினர்.

அதே சமயம், எண்ணூ

கடல் கொந்தளிப்பு காரணமாக தூத்துக்குடி துறைமுகம் இரண்டாவது நாளாக இன்றும் இயங்கவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X