ரிக்டர் ஸ்கேலில் 9.0: கடந்த நூற்றாண்டின் மிக பயங்கர பூகம்பம்
வாஷிங்டன்:
சுமத்ராவுக்கு அருகே கடலுக்குள் நேற்று ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 9.0 என்ற மிக பயங்கர அளவுக்குப்பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த நூற்றாண்டில் பூமி சந்தித்த மிக பயங்கரமான 4 நில நடுக்கங்களில் இதுவும் ஒன்று என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
முதலில் இது 8.5 என்ற அளவுக்கு இருந்தாகவும், பின்னர் 8.9 என்ற அளவில் இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், இதன் தாக்கம் 9.0 என்றமிக பயங்கர அளவில் இருந்தது என அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 0.1 அதிகரித்தால் நிலநடுக்கத்தின் அளவு பல மடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணத்துக்குரிக்டர் கோலில் 8.0 என்ற அளவுக்கும் 8.9 என்ற அளவுக்கும் இடையிலான வித்தியாசம் 0.9 தான். ஆனால், இதனால் நில நடுக்கத்தின்அளவு 32 மடங்கு அதிகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நில அதிர்வில்லை:
இதற்கிடையே இன்று நிருபர்களிடம் பேசிய சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், தமிழக கடலோரத்தில் இன்றுநில நடுக்கம் ஏதும் ஏற்படவில்லை.
ஆனால், நேற்றைய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து after shocks எனப்படும் தொடர் நடுக்கங்கள் சில நாட்களுக்கு நீடிக்கும். இதனால்கடல் அலைகளின் வேகமும் உயரமும் அதிகரிக்கலாம் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications