For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரவி சுப்பிரமணியம் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Raviசங்கரராமன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ரவி சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார். அவரை 3 நாட்கள்போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

ரவியை கேரள மாநிலம் குருவாயூரில் வைத்து போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

அவரை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது ரவியை போலீஸ் காவலில் அனுப்பக் கோரி போலீசார்மனு தாக்கல் செய்தனர்.

இதனை ஏற்ற நீதிபதி உத்தமராஜன், ரவியை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தார்.

இதைத் தொடர்ந்து ரவி சுப்பிரமணியம் காட்டுப் பங்களாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சுனாமி: ஜெயேந்திரரின் ஜாமீன் ஒத்திவைப்பு

இந் நிலையில், ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் தாக்கல் செய்த மனு இன்று மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்குவந்தது. இதை நீதிபதி பாலசுப்பிரமணியம் விசாரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது நீதிமன்றத்துக்கு வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து ஒரு தகவல் வந்தது. அதில், கடலில் மீண்டும் பெரும் அலைகள் ஏற்படவாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து விசாரணையை நீதிபதி நாளைக்கு ஒத்தி வைத்துவிட்டார்.

நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் தான் கடல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X