For Daily Alerts
Just In
போலீஸ் என்கெளண்டர்: ரவுடி கொலை
சென்னை:
சென்னை அருகே போலீஸாருடன் நடந்த மோதலில் ரவுடி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டான்.
சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்ற மார்க்கெட் ரவி. அப்பகுதியில் பிரபல தாதா. இவன் மீதுமொத்தம் 9 கொலை வழக்குகள் உள்ளன.
இவனை பல மாதங்களாக போலீஸார் தேடி வந்தனர். இந் நிலையில் ஆவடி அருகே ஆயப்பாக்கம் என்ற இடத்தில்ரவி மறைந்திருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அப்பகுதியை முற்றுகையிட்டு ரவியை சுற்றி வளைத்தனர். சரணடைந்து விடுமாறு ரவிக்குபோலீஸார் எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனால் ரவி தப்பிச் செல்ல முயலவே அவனை போலீஸார் சுட்டு வீழ்த்தினர். இறந்த ரவியின் உடல் போரூர்ராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. உடல்உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
Comments
Story first published: Monday, December 27, 2004, 5:30 [IST]