தமிழகத்தில் 5,000 பேர் பலி
சென்னை:
கடல் கொந்தளிப்பினால் தமிழகம் முழுவதும் மொத்தம் 5,000 பேர் வரை இறந்திருக்கிறார்கள்.
இதுவரை கிடைத்துள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஊர்வாரியாக இறந்தவர்களின் எண்ணிக்கை:
பழவேற்காடு -14 பேர், சென்னை பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் -200 பேர், கல்பாக்கம் - 66 பேர், மரக்காணம் -26 பேர், புதுவைநகரில் மட்டும் - 50 பேர், கடலூர் மாவட்டத்தில் -400 பேர், காரைக்கால் -155 பேர், நாகை மாவட்டத்தில் -3,000 பேர், கன்னியாகுமரிமாவட்டம் -500 பேர், குளச்சல் -120 பேர், முட்டம் -40 பேர், மணக்குடி, கோவளம் -100 பேர்.
இறந்தவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்க, காணாமல் போனவர்களும் ஆயிரக்கணக்கில் உள்ளனர். சாவு எண்ணிக்கை தொடர்ந்துஅதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
350 உடல்கள் மொத்தமாக எரிப்பு:
இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் உயிரிந்தவர்களில் 350 பேரின் உடல்கள் குளச்சல் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டன. அங்குஒரே இடத்தில் குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டன.