தெற்காசியாவில் மொத்தம் 19,000 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடல் கொந்தளிப்பால் தமிழகம் உள்பட தெற்காசியாவின் பல நாடுகளிலும் பலியானவர்களின் எண்ணிக்கை 19,000த்தைத்தாண்டிவிட்டது.
நாகப்பட்டிணம், சென்னை உள்பட தமிழகத்தில் 5,000 பேரும், இலங்கையில் 5,900 பேரும், இந்தோனேஷியாவில் 4,900 பேரும்பலியாகியுள்ளனர். அந்தமானில் 3,000 பேரும், தாய்லாந்தில் 840 பேரும் மலேசியாவில் 42 பேரும் பலியாகியுள்ளனர்.
அதே போல மாலத்தீவுகளின் பல பகுதிகளும் நீரில் மூழ்கிவிட்டன. இங்கு 32 பேர் பலியாகியுள்ளனர்.
கேரளாவில் 150, ஆந்திராவில் 73:
இதற்கிடையே கேரளாவில் கடல் கொந்தளிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 150யைத் தாண்டிவிட்டது. ஆந்திராவில் இந்தஎண்ணிக்கை 73 ஆகிவிட்டது.
மொத்தத்தில் சுமார் 19,000 பேர் பலியாகியுள்ளனர்.
ஆந்திராவில் கடலில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் உள்பட கடலோரத்தில் இருந்த 1,200 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications