சென்னையில் படப்பிடிப்புகள் ரத்து: விஜயகாந்த்
சென்னை:
கடல் கொந்தளிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னையில் இன்று சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 2001ம் ஆண்டில் ஜனவரி 26ம் தேதி குஜராத்தில் நடந்த பூகம்பத்தை இது நினைவூட்டுவது போல் இருக்கிறது. மிகவும் துயரமானசம்பவம் இது. மெரீனா பீச், பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களுக்கும், சடலங்கள் வைக்கப்பட்டிருந்த ராயப்பேட்டை மருத்துவமனை,ஸ்டான்லி மருத்துவமனைக்கும் சென்று பார்த்தேன்.
பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னையில் ஒரு நாள் முழுவதும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது.
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சங்கத்தின் சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும். மேலும் உயிரிழந்தவர்களின்குடும்பங்களுக்கு உதவும்படி எனது ரசிகர் மன்றத்தினரிடம் கூறியுள்ளேன் என்று தெரிவித்தார்.