கடல் கொந்தளிப்பு: நூலிழையில் உயிர் தப்பிய ஜெ.
சென்னை:
சென்னை பட்டினப்பாக்கத்தில் சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட வந்த முதல்வர் ஜெயலலிதா, திடீரென வந்த அலையில் சிக்காமல்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பட்டினப்பாக்கம் முதல்வர் ஜெயலலிதா நேற்று மதியம் வந்தார். அங்கு சேதங்களைப் பார்வையிட்ட ஜெயலலிதா, பாதிக்கப்பட்டமக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுவிட்டுச் சென்றார்.
முதல்வர் புறப்பட்ட ஒரு நிமிடத்தில், மிகப்பெரிய அலை ஒன்று கரை யை நோக்கி வந்தது. அங்கிருந்தவர்கள் பதறி ஓடினர். ஒரு நிமிடத்திற்குமுன் ஜெயலலிதா நின்றிருந்த இடத்தைக் கடல் நீர் தாண்டியது.
அதிர்ஷ்டவசமாக ஜெயலலிதா முன்னரே கிளம்பிச் சென்றுவிட்டதால் உயிர் தப்பினார்.
டி.ஆர். பாலுவும் தப்பினார்:
அதேபோல் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவும் கொட்டிவாக்கம் பகுதியில் ராட்சத அலையில் சிக்காமல் உயிர் தப்பினார்.
அங்கு கடலோரப் பகுதியில் மீனவர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தபோது, 3 மீட்டர் உயரத்துக்கு ராட்சத அலை வந்தது. இதையடுத்துபாலுவை அவரது பாதுகாவலர் இழுத்துக் கொண்டு ஓட, மீனவர்கள் ஓடித் தப்பினர்.












Click it and Unblock the Notifications