உலக வரலாற்றில் மாபெரும் நிவாரணப் பணி
ஜெனீவா:
![]() |
கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகளுக்கு பெரிய அளவிலான நிவாரணப் பணிகளை உலக நாடுகள் மேற்கொண்டுவருகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேஷியா கடல் பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் பெரும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதில்55,00க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.
இதைடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் உலக நாடுகள், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தீவிர நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க 44 மில்லியன் டாலர் தேவைப்படுவதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.இதன் பொதுச் செயலாளர் மார்க் நிஸ்கலா கூறுகையில்,
மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது பெரிய சவலாக உள்ளது என்றார்.
சீனா, டென்மார்க், பிரான்ஸ், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இலங்கைக்கு டன் கணக்கில் உணவுப் பொருட்களையும்,மருந்துகளையும் விமானங்களில் அனுப்பி வருகின்றன.
இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 114 மில்லியன் டாலர் அளவிற்கு உடனடி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்தியாவில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளதாக தொண்டு நிறுவன ஊழியர்கள்தெரிவித்துள்ளனர்.
தென்னிந்தியாவில் ஆய்வு செய்த யுனிசெஃப் அதிகாரி லிஸட் பர்க்கர்ஸ் கூறுகையில், முகாம்களில் சுத்தமான தண்ணீர் கிடைப்பதுஅரிதாகி வருகிறது. இதனால் நோய் பரவும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது என்றார்.
இந்தோனேஷியா, மியான்மர், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளும் பலத்த பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இந்தோனேஷியாவில்27,000க்கும் அதிகமானோர் பலியாகியிருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது.
இங்கு டெங்கு காய்ச்சலும், வயிற்றுப்போக்கும் பரவ வாய்ப்பிருப்பதாக செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த ஹாடி குஸ்வோயா கூறினார்.
நியூயார்க்கில் ஐ.நா. அதிகாரி ஜேன் இஜிலண்ட் கூறுகையில், உலக வரலாற்றிலேயே முதன் முறையாக மிகப் பெரிய அளவில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல இடங்களில் சடலங்களை அடையாளம் கண்டு எடுத்துச் செல்ல ஆட்கள் இல்லாததால் பெரும்பாலான சடலங்கள் மொத்தமாகஅடக்கம் செய்யப்படுகின்றன. சடலங்கள் அழுகி குடிநீரைப் பாதிக்கும் முன்பு அவற்றை அடக்கம் செய்ய வேண்டியுள்ளது.
இது மிகப் பெரிய பணியாகும். பல பில்லியன் டாலர் மதிப்புக்கு அழிவு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உயிர் பிழைத்தவர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறிய வண்ணம் உள்ளனர். மக்களைமீட்கவும்,காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும் நூற்றுக்கணக்கில் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள்பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!













Click it and Unblock the Notifications