நாகையில் 4,900 உடல்கள்: தமிழகத்தில் பலி 9,000
நாகப்பட்டிணம்:
நாகப்பட்டிணத்தில் மட்டும் இதுவரை 4,900 உடல்கள் மீட்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக ரெட் கிராஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதுமே 3,900 பேர் தான் உயிரிழந்ததாக தமிழக அரசு கூறிக் கொண்டிருந்தது. நாகப்பட்டிணத்தில் உயிரிழப்பு 2,500என்றது. ஆனால், நாகை மாவட்டத்தில் மட்டுமே 4,900 உடல்களை மீட்டு புதைத்துள்ளது ரெட் கிராஸ்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் 6,085 பேர் பலியாகிவிட்டதாக தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். நாகப்பட்டிணம்மாவட்டத்தில் 4,332 பேர் பலியாகியுள்ளதாகக் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 808 பேரும், கடலூரில் 559 பேரும், சென்னையில் 173 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 103 பேரும்மேலும் 8 மாவட்டங்களில் 110 பேரும் உயிரிழந்ந்ததாகவும், மொத்தத்தில் 7,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அதிகாரிதெரிவித்தார்.
ஆனால், நாகப்பட்டிணம் நகரில் இருந்து 2,400 உடல்களும், இம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் இருந்து 1,500 உடல்களும்,மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து 1,000 உடல்களும் மீட்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் தஞ்சாவூர்மாவட்டப் பொறுப்பாளர் ராஜ் மனோகர் தெரிவித்துள்ளார்.
இதனால் மாநிலம் முழுவதும் பலியானவர்கள் எண்ணிக்கை 9,000த்துக்கும் அதிகம் இருக்கும் என்று தெரிகிறது.
இதைத் தவிர மேலும் பல உடல்களை தங்களது அமைப்பின் தொண்டர்கள் மீட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
காயமடைந்தவர்கள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருவதாகவும், மேலும் தமிழக,கர்நாடகத்தைச் சேர்ந்த 30 மருத்துவக் குழுக்கள் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் முகாம்களை அமைத்து சிகிச்சை அளித்து வருவதாகவும்தெரிவித்தார்.
செஞ்சிலுவைச் சங்கத்தின் இந்த மீட்பு முயற்சிகளுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொண்டர்களும் முழு அளவில் உதவி புரிந்துவருகின்றனர்.
மீட்கப்படும் பல உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்துவிட்டதால் உறவினர்களுக்காக காத்திருக்காமல் அவைஉடனடியாகப் புதைக்கப்பட்டு வருகின்றனர்.
நாகூரில் இருந்து வேளாங்கண்ணி வரை சுமார் 14 மீனவ கிராமங்கள் ஒட்டுமொத்தமாக கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.
வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத் துறை, புஷ்பவனம், தரங்கம்பாடி அருகே உள்ள சந்திரபாடி, ஆக்கூர், சின்னங்குடி, குமரக்குடி ஆகியகிராமங்கள் அடியோடு அழிந்து போய்விட்டன.
நாகூர் தர்காவின் திருமண மண்டபத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவர்களுக்கு முறையாகஉணவும், மாற்று உடைகளும் தரப்படவில்லை. இதனால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டிணம் மாவட்டத்துக்கு பிஎச்இஎல், ஹூயுன்டாய் நிறுவனங்கள் லாரிகளில் மருந்துப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளன.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications