பிணங்களால் நோய் பரவுகிறது: கட்டுப்படுத்த ராணுவம் உதவி!!
சென்னை:
![]() |
நாகப்பட்டிணம், கன்னியாகுமரி, கடலூரில் பல இடங்களில் பிணங்களால் நீர் நிலைகள் கெட்டுப் போயுள்ளன. இந்த நீரை அருந்தியபலருக்கும் வாந்தியும் காலராவும் ஏற்பட்டுள்ளது. மேலும் டைபாய்ட் காய்ச்சலும் பரவி வருகிறது.
தங்களுக்கு உரிய அளவில் நோய் தடுப்புகளை வழங்கவில்லை என பொது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பல இடங்களில்மருந்துகள், உணவு கேட்டு சாலை மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து நோய்த் தடுப்பில் அரசு நிர்வாகத்துக்கு ராணுவம் உதவ ஆரம்பித்துள்ளது. தென் மண்டல ராணுவ கமாண்டில் இருந்துடாக்டர்களும் மருந்துகளும் இப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் பிணங்களை மீட்டுப் புதைப்பதை வேகப்படுத்த கன ரகபுல்டோசர் உள்ளிட்ட எந்தியரங்களுடன் ராணுவ பொறியாளர்களும் அனுப்பப்பட்டுள்ளனர்.
சுனாமி தாக்கிய தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வெளியில் கண்ணுக்குத் தெரியும் உடல்கள் அகற்றப்பட்டுபுதைக்கப்பட்டுவிட்டன. ஆனால், மண்ணுக்குள் அறைகுறையாகப் புதைந்து கிடக்கும் பிணங்கள், இடிபாடுகளில் கிடக்கும் உடல்கள்,முட்புதர்களில் குப்பையோடு குப்பையாய் சேர்ந்து கிடக்கும் உடல்களை உடனே கண்டுபிடிக்க காண முடியவில்லை.
இதனால் வாசனை வரும் இடத்தைக் குறி வைத்து இடிபாடுகளை நீக்கி, மண்ணைத் தோண்டி உடல்களைத் தேடி எடுத்து வருகின்றனர்மக்கள். மேலும் மோப்ப நாய்களின் உதவியுடன் உடல்களைத் தேடும் பணியில் போலீசாரும் ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.
புதைக்கப்படாத இந்தப் பிணங்கள் காரணமாக பலருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டு வருகிறது. மேலும் பலர் காய்ச்சலால்பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நோய் பரவாமல் தடுக்க மருத்துவக் குழுவினர் அப் பகுதிகளுக்கு அனுப்பட்டு வருகின்றனர்.
இந்தப் பணிகளில் மாவட்ட நிர்வாகத்துக்கு ராணுவமும் உதவி வருகிறது.
பல இடங்களில் நோய் தடுப்புக்காக பிளீச்சிங் பெளடர் தெளிக்கப்பட்டு வருகிறது.
குளச்சல் பகுதியில் இங்கு 806 பேர் இறந்ததாக அரசு கூறினாலும் இதைவிட இரு மடங்கு பேர் இறந்திருப்பதாகத் தெரிகிறது. மேலும் 700பேரின் கதி என்னவானது என்று தெரியவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 33 கிராமங்கள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 1 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,690வீடுகள் இடிந்துள்ளன. இவர்களில் 26,000 பேர் 44 அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களது ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகளும் உயிரிழந்துள்ளன.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே













Click it and Unblock the Notifications