தமிழகம்: 383 முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் தஞ்சம்
நாகப்பட்டினம்:
![]() |
தமிழகம் முழுவதும் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 383 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாகப்பட்டினம்மாவட்டத்தில் மட்டும் 96 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடல் கொந்தளிப்பினால் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் அடியோடு அழிந்துவிட்டன. நாகை, வேளாங்கண்ணி கடலோரப்பகுதிகளில் தொடர்ந்து பிணங்கள் கிடைத்து வருகின்றன. இவற்றைப் புதைக்கும் பணி ஒரு பக்கமும் மற்ற சீரமைப்பு பணிகள் இன்னொருபக்கமும் நடக்கின்ற.
நாகை மாவட்டத்தில் 96 முகாம்களில் 91,000 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 59 முகாம்களில் 39,800பேர் வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 25 முகாம்களில் 30,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 38முகாம்களில் 24,000 பேர் உள்ளனர்.
நாகப்பட்டினத்தில் இறந்தவர்களின் சடலங்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. வேளாங்கண்ணியில் மட்டும் 700 பேர்இறந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாதா கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பல்லாயிரம்மக்கள் பலியாகியிருப்பார்கள் என்கிறார்.
தஞ்சாவூர் ஆர்ச் பிஷப் தேவதாஸ் நிருபர்களிடம் பேசுகையில், வேளாங்கண்ணியில் இறந்தவர்களில் பெரும்பாலோனோர் கர்நாடகம்அல்லது மும்பையைச் சேர்ந்தவர்கள். கோயிலின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில்தான் உயிரிழப்பு அதிகமாயிற்று.
சடலங்களை மீட்கவும், இடிபாடுகளை சரிசெய்யவும் ஆவண செய்யும்படி தேவலாய அதிகாரிகள் அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.ஆனால் இன்றுதான் அரசு மீட்புக் குழுவினரை அனுப்பியுள்ளது என்றார்.
![]() |
அதிமுக பிரமுகர் ஓ.எஸ். மணியம் நிருபர்களிடம் பேசுகையில், நாகப்பட்டிணத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்.ஏராளமானோரைக் காணவில்லை என்று கூறினார்.
கடந்த 30 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் தினத்தன்று வேளாங்கண்ணி வருவதை வழக்கமாகக்கொண்டிருக்கும் பெர்னார்ட் டிசெளசாஎன்பவர் கூறுகையில், கடந்த 26ம் தேதி 10 மீட்டர் உயரத்துக்கு அலையடித்ததைப் போல வேறெப்போதும் பார்த்ததில்லை என்றார்.
இவர் தனது குடும்பத்தார் 11 பேருடன் வந்தார். அதில் இப்போது இவர் உட்பட இருவர் மட்டுமே எஞ்சியுள்ளனர். மற்றவர்களை அலைகொண்டு சென்று விட்டது. இதற்கிடையே பாதி புதைந்த நிலையில் இருந்த ஒரு வேனில் இருந்து 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்














Click it and Unblock the Notifications