ஆடிட்டர் வழக்கிலும் அய்யர் கைது!
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கர மடத்தின் நிர்வாகியான சுந்தரேச அய்யர் இப்போதுஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரைப் போலவே இவரும் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கிலும் அய்யர் கைதாகியுள்ளார். விசாரிக்கப்பட்டவர்களில்விஜயேந்திரர் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளார்.
ஜெயேந்திரர் ஜாமீன்: தீர்ப்பு ஒத்திவைப்பு
இந் நிலையில் ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதானதீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துவிட்டது.












Click it and Unblock the Notifications