கடலூரில் நில நடுக்கம்: நிலத்தில் பிளவு- மக்கள் பீதி!
கடலூர்:
![]() |
கடலூரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டதால் பொது மக்கள் மத்தியில் பெரும் பயம் பரவியுள்ளது.
சுனாமி தாக்குதலால் பெரும் பாதிப்படைந்துள்ள கடலூரில் நேற்று காலை 11 மணியளவில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது.
இதையடுத்து புதுப்பாளையம் என்ற இடத்தில் புனித அன்னாள் பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நிலப் பரப்பில் பிளவுகள்ஏற்பட்டன. இதைப் பார்த்த பள்ளி நிர்வாகிகளும் ஊழியர்களும் அதிர்ச்சியடைந்து உடனடியாகப் பள்ளியை மூடினர்.
மாணவிகள் உடனடியாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
.தகவல் கிடைத்ததும், மாவட்ட ஆட்சித் தலைவர் ககந்தீப் சிங் பேடி, உள்ளாட்சித் துறை செயலாளர் சி.கே.கரியாலி மற்றும் அதிகாரிகள்விரைந்து வந்து வெடிப்பைப் பார்வையிட்டனர்.
நெய்வேலியில் லிக்னைட் நிறுவனத்தில் பணியாற்றும் புவியியல் நிபுணர்களும் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். இப் பகுதியிலும்மீண்டும் நில நிடுக்கம் வர வாய்ப்புள்ளதா என்பது குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதனால் கடலூர் மக்களிடையே பரபரப்பு அதிகரித்துள்ளது.













Click it and Unblock the Notifications