இதுவரை தொற்று நோய் பரவவில்லை: மத்திய அரசு
சென்னை:
![]() |
சுனாமி தாக்குதல் ஏற்பட்ட தமிழகம் மற்றும் புதுவையில் இதுவரை தொற்று நோய்கள் ஏதும் பரவவில்லை எனமத்திய சுகாதாரத் துறையின் இயக்குனர் டாக்டர் அகர்வால் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நிவாரண நடவடிக்கைகள் குறித்து மாநில அரசு அதிகாரிகளுடன் மத்தியசுகாதாரத் துறை தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறது.
இதுவரை 50 சிறப்பு மருத்துவ நிபுணர்களை இரு மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அனுப்பியுள்ளது.சுனாமி பாதித்த பகுதிகளில் இதுவரை 1,500 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இரு மாநிலங்களிலும் சுனாமி பாதித்த பகுதிகளில் இதுவரை தொற்று நோய் ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறியேஇல்லை. தொற்று நோய் ஏற்பட்டால் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில் தொற்று நோய் பரவாது என்று கூற முடியாத நிலைதான் தற்போதைக்கு உள்ளது என்றார் அவர்.
சிதறிக் கிடக்கும் மனித, விலங்குகளின் உடல்களால் நாகை, குமரி மாவட்டங்களில் தொற்று நோய் பரவும்அபாயம் இருப்பதாக அம் மாவட்ட நிர்வாகங்கள் எச்சரித்தது நினைவுகூறத்தக்கது.
இதையடுத்து உடல்களை மீட்டுப் புதைக்கும் பணி வேகப்படுத்தப்பட்டது. பெரும்பாலான இடங்களில் உடல்களைபுதைக்கும் பணி முடிந்துவிட்டது.













Click it and Unblock the Notifications