ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் 11 குழுக்கள்
நாகப்பட்டணம்:
அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று நாகப்பட்டனம் வந்தார். நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் வீரசண்முக மணி,தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடன் மீட்புப் பணிகலை ஆய்வு செய்தார்.
நாகை, கடலூர், தஞ்சை மாவட்டங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு ஆட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பன்னீர் செல்வம்உத்தரவிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், சுனாமி நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட 11 குழுக்கள்நியமிக்கப்பட்டுள்ளன. இதில் அமைச்சர்களாகிய நான் மற்றும் பாண்டுரங்கன் ஆகியோரும், எம்.பிக்கள்,எம்.எல்.ஏக்கள், வாரியத் தலைவர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர் என்றார்.
திமுக சார்பில் 3,000 கிலோ அரிசி:
இதற்கிடையே சென்னையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3,000 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
வட சென்னை திமுக சார்பில் ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடும்பத்துக்கு 5 கிலோஅரிசி வழங்கப்பட்டது.
திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின், நடிகர் நெப்போலியன்ஆகியோர் இவற்றை வழங்கினர்.