சுமத்ரா, அந்தமான், காஷ்மீரில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
![]() |
சுமத்ரா, அந்தமான், காஷ்மீர் பகுதிகளில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டது.
நேற்று நள்ளிரவு 12.48 மணியளவில் சுமத்ரா தீவின் வடக்கே ரிக்டர் ஸ்கேலில் 5.2 என்ற அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இங்குஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரலைகள் உருவாகி தெற்காசியாவின் கடலோரங்கள் அழிந்தன.
இந் நிலையில் நேற்று இரவு 11.05 மணிக்கு லிட்டில் நிகோபாரிலும், இன்று அதிகாலை 3.06 மணிக்கும், 4.35 மணிக்கும் மத்திய அந்தமான்தீவுகள் அருகிலும் ரிக்டர் ஸ்கேலில் 5.5 என்ற அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதே போல காஷ்மீரிலும் இரவு 10.35 மணியளவில் ரிக்டர் ஸ்கேலில் 4.0 என்ற அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டது.













Click it and Unblock the Notifications