ரவி இன்று ரகசிய வாக்குமூலம்
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் காண்டிராக்டர் ரவி சுப்ரமணியம் இன்று பிற்பகல் காஞ்சிபுரம் 2வது குற்றவியல்நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளிக்கவுள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் 2வது குற்றவாளியான ரவி சுப்ரமணியம் சமீபத்தில் கேரள மாநிலம் குருவாயூரில்கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்ட அவர் இன்று காஞ்சிபுரம் 2வதுகுற்றவியல் நீதிபதி தாமோதரன் முன் ஆஜராகி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்.
சென்னையில் அப்பு:
இந் நிலையில் நெஞ்சு வலி காரணமாக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கூலிப் படைத்தலைவன் அப்பு, மேல் சிகிச்சைக்காக சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளான்.
மருத்துவக் குழுவுடன் மிகுந்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டுள்ள அப்புவுக்கு சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.