For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் பலியானோர் எண்ணிக்கை 12,000

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் சுனாமி பேய் அலைகளுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 10,000 முதல் 12,000 வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆனால், தமிழக அரசின் கணக்கின்படி 13 கடலோர மாவட்டங்களில் மொத்தம் 6,207 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்2,732 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதிகள்

Tamil Nadu coastal areas affected by Tsunami wavesஅரசின் கணக்கின்படி பலியானவர்கள் விவரம்:

நாகப்பட்டிணம்- 4,379

கன்னியாகுமரி- 808

கடலூர்- 571

காஞ்சிபுரம்- 124

சென்னை- 204

விழுப்புரம்- 47

திருவள்ளூர்- 27

புதுக்கோட்டை- 15

திருவாரூர்- 10

தஞ்சாவூர்- 9

ராமநாதபுரம்- 6

திருநெல்வேலி- 4

தூத்துக்குடி- 3

அரசின் கணக்கில் காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேளாங்கண்ணி பகுதியில்ஆயிரம் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இங்கு கிருஸ்துமஸை ஒட்டி சுற்றுலா வந்து பல நூறு பேரின் உடல்களைக் காணவில்லை.

அதே போல நாகப்பட்டிணத்தில் ரெட் கிராஸ் புதைத்த உடல்கள் மட்டும் 4,900. இதைத் தவிர குடும்பத்தினர், பொது மக்கள் ஆகியோரும்அனாதையாகக் கிடந்த பல உடல்களைப் புதைத்துள்ளனர். இந்த மாவட்டத்தில் பல நூறு பேரைக் காணவில்லை. ஆனால் மொத்த பலியே4,379 தான் என்கிறது அரசு.

இதே போல கடலூரிலும் கன்னியாகுமரியிலும் நூற்றுக்கணக்கானவர்களைக் காணவில்லை. குளச்சல் பகுதியில் பல கடலோர கிராமங்களேமொத்தமாகக் காணாமல் போய்விட்டன. இப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான சாவுகள் கணக்கில் வரவில்லை.

இந் நிலையில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி 12,000 பேர் வரை தமிழகத்தில் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X