தெற்காசியாவில் பலி 1,21,000 ஆக உயர்ந்தது
ஜகார்தா:
தமிழகத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 10,000மாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இலங்கையில் பலியானவர்கள் எண்ணிக்கை 24,743ஆகியுள்ளது. மேலும் 4,916 பேரைக் காணவில்லை என அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
இவர்களும் பலியாகிவிட்டதாகவே தெரிகிறது. இதனால் இலங்கையில் உயிர் நீத்தோர் எண்ணிக்கை 30,000த்தை எட்டிவிடும் என்றுஅஞ்சப்படுகிறது.
இந்த சுனாமி பேரலைகளால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது இந்தோனேஷியா தான். இங்கு 79,940 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாய்லாந்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 4,510 ஆகிவிட்டது. இவர்களில் 2,230 பேர் வெளிநாட்டினர் ஆவர். மேலும் 6,121 பேரைக்காணவில்லை. இவர்களில் 80 சதவீதம் பேர் இறந்துவிட்டதாகவே கருதப்படுவதாக தாய்லாந்து பிரதமர் தஸ்கின் சினவத்ரா கூறியுள்ளார்.
சோமாலியாவில் 130 பேர் பலியாகியுள்ளனர். மியான்மாரில் 90 பேர் பலியாகிவிட்டனர்.
மாலத்தீவுகளில் பலியானோர் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 42 பேரைக் காணவில்லை என அந் நாட்டு அதிபர் மைமூல்அப்துல் கையூம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் 66 பேர் பலியாகியுள்ளனர். பெரும்பாலான சாவுகள் பினாங் பகுதியில் நடந்துள்ளன.