சேதத்தை பார்வையிட மத்திய குழு அமைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
![]() |
கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளைப் பார்வையிட மத்திய அரசு குழு அமைத்துள்ளது. இந்தகுழு நாளை மறுநாள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
கடல் கொந்தளிப்பால் சேதமடைந்த பகுதிகளில் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கவும், ஆய்வு செய்யவும் பிரதமர் மன்மோகன் சிங்தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சரவை செயலாளர் சதுர்வேதி கூறியதாவது:
![]() |
கடல் கொந்தளிப்பால் பாதிக்கபட்ட தமிழ்நாடு, அந்தமான், பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் உணவு, மருந்து, உடைமற்றும் இருப்பிட வசதிகளை ஏற்படுத்தித் தரும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் பணியில் பாதுகாப்பு அமைச்சக செயலாளர் அஜய் விக்ரம் சிங் தலைமையிலான குழு செயல்படும்.
இந் நிலையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மதிப்பிடுவதற்காக மத்திய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழு வரும் 4ம் தேதிபாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்யும் என்று கூறினார்.














Click it and Unblock the Notifications