ஜே.என்.தீட்சித் மரணம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

JN Dixitபிரதமரின் பாதுகாப்பு ஆலோசகரான ஜே.என். தீட்சித் இன்று திடீரென மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 68.

இன்று காலை 6 மணியளவில் வீட்டில் அவருக்கு கடும் நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து அவர் டெல்லி அகில இந்திய மருத்துவக் கழகமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக டெல்லி சப்தர்ஜங் சாலையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குபுதன்கிழமை நடைபெறுகிறது.

ஜோதிந்திர நாத் தீட்சித் என்ற முழுப் பெயர் கொண்ட ஜே.என். தீட்சித்துக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.

இந்திய வெளியுறவுத்துறையின் பல கொள்கை முடிவுகளை இறுதி செய்தவர் தீட்சித். 1936ம் ஆண்டு சென்னையில் பிறந்த தீட்சித் 36வருடம் இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்றினார்.

இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளராக இருந்து 10 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற தீட்சித், முன்னதாக இலங்கையில் தூதராகப்பணியாற்றியுள்ளார்.

அப்போது தான் ஜெயவர்த்தனே-ராஜிவ் காந்தி ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்திய அமைதிப் படை அங்கு அனுப்பப்பட்டது. இலங்கைவிஷயத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு தவறான ஆலோசனைகள் தந்தவர் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்கானவர் தீட்சித்என்பது குறிப்பிடத்தக்கது.

1971ம் ஆண்டில் வங்கதேசம் உருவானபோது அந் நாட்டில் முதல் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டவர் தீட்சித். மாலத்தீவுகள் தவிர்த்துஅனைத்து தெற்காசிய நாடுகளிலும் இந்தியத் தூதராக இருந்தவர். ஆப்கானில்தானின் முதல் இந்தியத் தூதராகப் பணியாற்றியவர்.பாகிஸ்தான் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் சிலி, மெக்சிக்கோ, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் தூதரக அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.

ஐஎப்எஸ் பணியில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற பின் காங்கிரஸ் கட்சியின் வெளியுறவுத்துறை பிரிவில் இணைந்துபணியாற்றினார். இதனால் பா.ஜ.க. ஆட்சியில் ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்த தீட்சித், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பதவியேற்றவுடன்பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

சீனாவுடனான எல்லைப் பிரச்சனை, பாகிஸ்தானுடன் காஷ்மீர் விவகாரங்கள் குறித்து தொடர் ஆலோசனைகளில் தீட்சித் ஈடுபட்டு வந்தார்.பல்வேறு புத்தகங்களையும் தீட்சித் எழுதியுள்ளார். சீன, பாகிஸ்தான் விவகாரங்களில் இவர் நிபுணராக விளங்கினார். ஆனால், இலங்கைவிஷயத்தில் இவர் எடுத்த முடிவுகள் பெரும் தவறாகவே போய் முடிந்தன.

மன்மோகன் இரங்கல்:

தீட்சித் மறைவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

நெருங்கிய நண்பரை நான் இழந்து விட்டேன். மதிப்பு மிக்க சக ஊழியராகவும், சிறந்த ஆலோசகராகவும் அவர் விளங்கினார். நாடு ஒருஉண்மையான தொண்டரையும், சிறந்த மனிதரையும் இழந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+