இலங்கை: யுனிசெப் அனுப்பிய ரெடிமேட் பள்ளிகள்
கொழுப்பு:
இலங்கையில் சுனாமி அலைகள் தாக்கிய பகுதிகளில் ரெடிமேட் பள்ளிகளை அமைக்கும் பணியில் யுனிசெப் நிறுவனம்ஈடுபட்டுள்ளது.
இலங்கையில் கடல்கொந்தளிப்பு காரணமாக 200-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் தரைமட்டமாகி விட்டன. இந்தப் பகுதிகளில்ரெடிமேட் பள்ளிகளை அமைக்கும் பணியில் ஐ.நா. சபையின் யுனிசெப் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
முதல் கட்டமாக 100 ரெடிமேட் பள்ளிகளை அனுப்பி வைத்துள்ளது. பெரிய பெட்டி போல இருக்கும் இந்த ரெடிமேட்பள்ளிக்கூடங்களை ஒரு சில நிமிடங்களில் வகுப்பறையாக மாற்றி விடலாம். இந்த பெட்டிகளில் மேஜை, கரும்பலகை, சின்னநாற்காலிகள், பேனாக்கள், பென்சில், நோட்டுப் புத்தகங்கள் என வகுப்பறைக்குத் தேவையான அனைத்தும் இருக்கும்.
இந்த ரெடிமேட் பள்ளிகளை எங்கு வேண்டுமானாலும் நடத்த முடியும். இந்த பள்ளிகளுக்கு இலங்கை குழந்தைகளிடையே நல்லவரவேற்பு கிடைத்துள்ளது.
பள்ளிக் கூடங்களைச் சீரமைக்க சில மாதங்கள் ஆகும் என்பதால் இதுபோன்ற 100 ரெடிமேட் பள்ளிக்கூடங்களுடன் யுனிசெப்தலைவி கரோல் பெல்லானி இலங்கையில் முகாமிட்டிருக்கிறார்.