கோவில்கள் உதவ வேண்டும்: ஆர்எம்வீயின் அருமையான யோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழகத்தில் உள்ள பெரிய திருக்கோவில் நிர்வாகங்கள உதவி செய்ய முன் வரலாம்ம் என்றுஎம்.ஜி.ஆர். கழக பொதுச் செயலாளர் ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.
எம்ஜிஆர் ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த வீரப்பன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தின் பெரிய கோவில்களில் ஒரு மாதத்தில் சேரும் உண்டியல் தொகையை அப்படியே சுனாமி நிவாரணத்திற்கு வழங்கலாம்.இதேபோல திருப்பதி கோவிலின் ஒரு மாத உண்டியல் வசூல் ரூ. 21 கோடி ஆகும்.
இந்தத் தொகை மற்றும் ஒரு மாத காலத்தில் சேரும் தங்க, வைர, வெள்ள நகைகள் ஆகியவற்றையும் பணமாக்கி அவற்றையும் சுனாமியால்பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாம்.
திருக்கோவில்கள் தங்களது உண்டியல் வசூலை நிவாரண நிதிக்கு வழங்கி இறைவனின் பிரதிநிதிகளாக மக்களைக் காப்பாற்ற வேண்டும்.
எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் ரூ. 1 லட்சம் நிதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார் ஆர்.எம்.வீரப்பன்.













Click it and Unblock the Notifications