நாகை: மக்களோடு மக்களாகி விட்ட ராணுவத்தினர்

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்:

The scene in Nagai
நாகை மாவட்டத்தில் சுனாமி அலைகள் தாக்கிய பகுதிகளில் மீட்புப் பணிக்கு வந்த ராணுவத்தினர் தங்களது அரிய சேவையால் மக்களிடம்பெரும் பாராட்டைப் பெற்று வருகின்றனர்.

பெங்களூரில் இருந்து மெட்ராஸ் என்ஜீனியரிங் குரூப் ராணுவத்தினர் நாகப்பட்டினத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இவர்களை சற்று அந்நியமாகவே பார்த்தனர்.

ஆனால், பிணங்களை மீட்பது, சேதமடைந்த சாலைகள், படகுகளை சரிபார்ப்பது, குடிநீரை வழங்குவது என தங்களது அளப்பரியசேவையால் ராணுவத்தினர் இப்போது மக்களின் அன்புக்குப் பாத்திரமானவர்களாக மாறிவிட்டனர்.

இது குறித்து மேஜர் சிவா கூறுகையில்,

தொடக்கத்தில் இப்பகுதி மக்கள் எங்களை அணுக கொஞ்சம் தயக்கம் காட்டினர். ஆனால் எங்களது நிவாரணப் பகுதிகளால் அவர்களுக்குநெருக்கமானவர்களாக நாங்கள் மாறினோம். இப்போது அவர்களது படகுகளை சரிசெய்வது உள்ளிட்ட பணிகளுக்காக எங்களைத் தேடிவருகின்றனர்.

நாங்கள் படகுகளை மட்டும் சரி செய்யவில்லை. மீனவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுடன் கடலுக்கும் செல்கிறோம்.

கடல் கொந்தளிப்பில் நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி சாலை மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அதை எங்களது வீரர்கள்தான்சரிப்படுத்தினர்.

மேலும் சென்னை ராணுவத்தினர் அனுப்பி வைத்த ஏராளமான அரிசி, பருப்பு, தேயிலை ஆகியவற்றை மக்களிடம் விநியோகித்துள்ளோம்.

இப்போது மக்களிடம் எங்களுக்கு நல்ல பெயர் உள்ளது. எந்தவிதமான உதவி இருந்தாலும் எங்களை நாடி வருகின்றனர். நாங்கள் இந்தஇடத்தை விட்டுப் போகும்போது, குறைந்தது 12 இளைஞர்கள் ராணுவத்திற்கு சேர முன்வந்தால் அதுவே எங்களுக்குக் கிடைத்தவெற்றியாகும் என்று கூறினார்.

அரசு நிவாரணப் பணிகள் முழு அளவில் இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில், ராணுவத்தினரின் பணிகள்பாராட்டிற்குரியவைதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+