ஜெயேந்திரருக்கு இன்று ஜாமீன் கிடைக்குமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

Jayandrar சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று காலை வழங்கப்படுகிறது.

சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள ஜெயேந்திரர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடிசெய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விவாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை தீர்ப்பு வழங்கப்படும் என்றுஉச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தலைமை நீதிபதி ஆர்.சி.லஹோத்தி தலைமையிலான 3 பேர் கொண்ட பெஞ்ச் இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பை அறிவிக்கும்என்று எதிர்பார்க்ப்படுகிறது.

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கில் ஏற்கனவே ஜெயேந்திரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்வழங்கப்பட்டுள்ளது. சங்கரராமன் கொலை வழக்கிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்தால் சிறையிலிருந்து அவர் விடுதலையாவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+