For Daily Alerts
Just In
27ல் தியாகராஜ ஆராதனை விழா
கும்பகோணம்:
158வது தியாகராஜ ஆராதனை விழாவை ஆளுநர் பர்னாலா ஜனவரி 27ம் தேதி திருவையாறு நகரில் தொடங்கி வைக்கிறார்.
கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகள் என அழைக்கப்படுபவர்களில் ஒருவரான தியாகய்யரின் 158வது ஆராதனை விழா வருகிற 27ம்தேதி தொடங்குகிறது. இந்த விழாவை ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தொடங்கி வைக்கிறார்.
நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும்கலந்து கொள்கின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்தின கீர்த்தனை ஜனவரி 30ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு பஞ்ச ரத்தினக் கீர்த்தனைகளை பாடவுள்ளனர்.
Comments
Story first published: Monday, January 10, 2005, 5:30 [IST]