ஜெ. பதவி விலக வேண்டும்: பிரமோத் மகாஜன்

Subscribe to Oneindia Tamil

மைசூர்:

Jayendrarஜெயேந்திரருக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளதால் முதல்வர் ஜெயலலிதா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றுபாஜக பொதுச் செயலாளர் பிரமோத் மகாஜன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரருக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியதை பாஜக முழுமையாக வரவேற்கிறது. இந்தவழக்கில் ஜெயேந்திரருக்கு எதிராக முக்கிய ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி வந்த தமிழக அரசு அதை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யத் தவறிவிட்டது.

இதற்கு தார்மீக பொறுப்பேற்று ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த வழக்கில் தொடக்கம்முதலே பாஜக ஜெயேந்திரருக்கு ஆதரவாக இருந்து வருகிறது. இந்த வழக்கு சுதந்திரமாக நடைபெற வேண்டுமானால்,தமிழகத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டுமென பாஜக கூறிவருகிறது.

இப்போது ஜெயேந்திரருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதன் மூலம் எங்கள் கோரிக்கை சரியானதே என்பதுநிரூபணமாகியுள்ளது. தமிழகத்தில் எந்த கட்சியுடனும் பாஜக இப்போது கூட்டணி வைக்கவில்லை என்று தெரிவித்தார்.

வெங்கையா பேட்டி:

இதற்கிடையே விஜயேந்திரர் கைது குறித்து பாஜக முன்னாள் தலைவர் வெங்கையாநாயுடு நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயேந்திரருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் விடுதலையாவதை அரசால் தடுக்கமுடியவில்லை. அதனால்தான் விஜேயந்திரரை கைது செய்துள்ளனர். இது பழிவாங்கும் நடவடிக்கையாகும்.

இதன் மூலம் சங்கர மடத்திற்கு களங்கம் ஏற்படுத்த தமிழக அரசு முயற்சி செய்கிறது. அந்த முயற்சி பலிக்காது. விரைவில் உண்மைவெளிவரும். அப்போது சங்கரமடத்திற்கு ஏற்பட்ட களங்கம் துடைக்கப்படும் என்று கூறினார்.

சிபிஐ விசாரணை:

இந் நிலையில் பாஜக மூத்த தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி, சங்கரராமன் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றுநிருபர்களிடம் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+