இளையவரிடம் போலீஸ் 1 மணி நேர விசாரணை
காஞ்சிபுரம்:
விஜயேந்திரரைக் கைது செய்த போலீஸ் தனிப்படை அவரை காட்டுப் பங்களாவில் வைத்து ஒரு மணி நேரம் விசாரணை செய்தது.அதன் பிறகே விஜயேந்திரர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
நேற்று மாலை சங்கர மடத்திற்குள் நுழைந்த காஞ்சிபுரம் போலீஸ் தனிப்படை விஜயேந்திரரை அதிரடியாக கைது செய்தது. பலத்தபாதுகாப்புடன் அவரை வெளியே கொண்டு வந்த போலீஸார், சங்கர மடத்திற்குச் சொந்தமான வேனில் விஜயேந்திரரை காட்டுப்பங்களாவிற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு வைத்து விஜயேந்திரரிடம் எஸ்.பி. பிரேம்குமார் சுமார் 1 மணி நேரம் விசாரணை நடத்தினார். அதன் பின்னர்விஜயேந்திரரை நீதிபதி உத்தமராஜ் முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர்.
விஜயேந்திரரிடம், உங்கள் மீதான குற்றச்சாட்டை ஏற்கிறீர்களா என்று நீதிபதி கேட்டார். அதற்கு விஜயேந்திரர் நான் ஒரு தவறும்செய்யவில்லை, அப்பாவி என்று குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் விஜயேந்திரர் சென்னை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications