விஜயேந்திரர் கைது மத்திய அரசுக்கு முன்பே தெரியும்
டெல்லி:
விஜயேந்திரர் கைது செய்யப்படுவது மத்திய அரசுக்கு முன்பே தெரியும் என்று பிரதமர் அலுவலக பத்திரிக்கை ஆலோசகர் சஞ்சய் பாருகூறினார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
விஜயேந்திரர் கைது செய்யப்படுவார் என மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது. எனவே தான் கடந்த 6ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவுக்குபிரதமர் மன்மோகன் சிங் ஒரு கடிதம் எழுதினார்.
சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்பதில் மத்திய அரசுக்கு உடன்பாடு தான் என்றாலும், பக்தர்களின் உணர்வுகளையும் கருத்தில்கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று அதில் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து கடந்த 7ந் தேதி சென்னையில் இது குறித்து மன்மோகனிடம் ஜெயலலிதா பேசினார். அப்போது விஜயேந்திரருக்கு எதிராகவலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும், கைது நடவடிக்கையைத் தள்ளிப் போட முடியாது என்றும் ஜெயலலிதா கூறினார்.
இந்த பிரச்சினையில் தமிழக அரசு நிதானமாக செயல்படவேண்டும் என்று மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார். அதற்கு ஜெயலலிதாஎல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறோம் என்று கூறினார்.
கைதுக்குப் பிறகு தமிழக அரசுடன் மத்திய அரசு எதுவும் பேசவில்லை என்று அவர் கூறினார்.