ரூ.9 கோடி நிவாரண பொருட்கள்: ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

House construction work in Nagai
ரூ.9 கோடி மதிப்பில் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.600 அளவிலான நிவாரணப் பொருட்களை வழங்கப்படும் என்று முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுனாமி அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ரூ.302.36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும்,5,000 ரூபாய் மதிப்பிலும், வீடுகள் பாதிக்கப்படாத குடும்பங்களுக்கு தலா ரூ.3,000 மதிப்பிலும் உடனடி நிவாரண உதவிகள்வழங்கப்பட்டுள்ளது.

வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு ரூ.8,000 மதிப்பில் தற்காலிக குடியிருப்பு ஒன்றை ஒரு வார காலத்திற்குள் கட்டித்தர நான்உத்தரவிட்டுள்ளேன்.

அரசு வழங்கும் நிவாரண உதவிப் பொருட்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள ஏதுவாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் டிரங்குப் பெட்டிஒன்றை வழங்க இப்போது உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் 1.5 லட்சம் குடும்பங்களுக்கு மண்ணெண்ணெய் ஸ்டவ், எவர்சில்வர் குடம் வழங்கவும் ஆணையிட்டுள்ளேன். ஒவ்வொருகுடும்பத்திற்கும் ரூ.600 ரூபாய் செலவில் இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்படும்.

இவற்றை விநியோகிக்கும் பணி வரும் 14ம் தேதி, அதாவது பொங்கல் தினம் முதல் நடைபெறும். ரூ.9 கோடி செலவில் இந்த திட்டம்செயல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+