For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயேந்திரர் முன்ஜாமீன் மனு நாளைக்கு ஒத்திவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Jayendrar திருகோஷ்டியூர் அர்ச்சகர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுமீதான நாளையும் தொடர்கிறது.

கோயில் ஒன்றை புனரமைப்பது தொடர்பாக திருகோஷ்ட்டியூர் அர்ச்சகர் மாதவனுக்கும் ஜெயேந்திரருக்கும் கருத்து வேறுபாடுஏற்பட்டதாகவும், இதையடுத்து சென்னை வந்த மாதவன் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை ஆயிரம் விளக்குகாவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கில் போலீஸார் தன்னைக் கைது செய்யக்கூடும் என்றும் எனவே தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி சென்னைசெஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி கணேஷ்நாளைக்கு ஒத்தி வைத்தார்.

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரருக்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X