ஜெயேந்திரர் விடுதலை: கலவையில் தங்குகிறார்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

Jayendrar ஜெயேந்திரர் இன்று மாலை 4.30 மணிக்கு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அவர் ஆற்காடு அருகே உள்ள கலவை என்றகிராமத்தில் ஜெயேந்திரர் தங்க முடிவெடுத்திருக்கிறார்.

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரை ஜாமீனில் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இன்று காலை 10.45 மணிக்கு செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ரங்கராஜூவிடம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் நகல்வழங்கப்பட்டது.

மன்னார்குடியைச் சேர்ந்த சங்கரமட பக்தர் ராமச்சந்திரனும், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை நிர்வாகி பம்மல் விசுவநாதனும்ஜெயேந்திரருக்காக தலா ரூ.50,000 ஜாமீன் பத்திரங்களை வழங்கினர்.

ஜெயேந்திரரின் பாஸ்போர்ட்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அரசு வழக்கறிஞர் ஜெயக்குமார், இந்த பாஸ்போர்ட்உண்மையானதுதானா என சரிபார்க்க வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து பாஸ்போர்ட் சரியானதுதானா என்பதை ஆய்வு செய்ய 2வது நீதிமன்றத்திற்கு நீதிபதி அனுப்பினார். பின்னர்ஜெயேந்திரருக்காக இருவர் அளித்த ஜாமீனை ஏற்றுக்கொண்டார். ஜெயேந்திரரை விடுதலை செய்வதற்கான உத்தரவு ஒன்றையும் நீதிபதிரங்கராஜூ பிறப்பித்தார்.

இந்த உத்தரவுடன் ஜெயேந்திரரின் வழக்கறிஞர்கள் பகல் 11.30 மணிக்கு வேலூர் சிறைக்குப் புறப்பட்டு சென்றனர். அங்கு சிறைஅதிகாரிகளை சந்தித்து உத்தரவு நகலை வழங்குகினர்.

இதனையடுத்து மாலை 4.30 மணிக்கு ஜெயேந்திரர் விடுதலையானார். அவரை பாஜக தலைவர்கள் சுஷ்மா சுவராஜ் , திருநாவுக்கரசர்,வி.எச்.பி. தலைவர் அசேசாக் சிங்கால் உள்ளிட்டோர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். ஏராளமான பக்தர்கள் அவரது காலில்விழுந்து வணங்கினர்.

ஜெயேந்திரர் மெளன விரதம் கடைப்பிடிப்பதால் நிருபர்களிடம் பேசமாட்டார் என்று காஞ்சி மட ஊழியர் தெரிவித்தார். பின்னர் காஞ்சிமடத்திற்குச் சொந்தமான மஞ்சள் நிற வேனில் ஏறினார்.

விடுதலைக்குப் பின் ஜெயேந்திரர் சங்கர மடத்துக்குள் செல்லக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அவர் வேலூர்மாவட்டத்தில் ஆற்காடு அருகில் செய்யாறு போகும் வழியில் 28 கி.மீ. தூரத்தில் இருக்கும் கலவை கிராமத்திற்கு செல்கிறார்.

அங்கு சந்திரமெளலீஸ்வரர் பூஜையை இன்று மாலை தொடங்குகிறார். பூஜை செய்வதற்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் காஞ்சிசங்கர மடத்தில் இருந்து கலவைக்கு ஏற்கனவே கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கலவையில் சங்கர மடத்துக்கு சொந்தமான நிலங்கள், கட்டடங்கள் உள்ளன. காஞ்சி மகாப் பெரியவர் சந்திரசேகரேந்திர சுவாமிகள்அடிக்கடி இங்கு வந்து தங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+