ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கோர்ட்டில் வாக்குமூலம்
சென்னை:
கூலிப் படையினரால் தாக்கப்பட்ட ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 3 மணிநேரம் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
கூலிப் படையினரால் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் ஜெயேந்திரர் தல் குற்றவாளியாகசேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக ராதாகிருஷ்ணனிடம் காஞ்சி தனிப்படை போலீஸார் ஏற்கனவே விசாரணைநடத்தியுள்ளனர். இந் நிலையில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் சைதாப்பேட்டை நீதிமன்றம் வந்தார்.
அங்கு 17வது குற்றவியல் நீதிபதி பால்ராஜ் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
சங்கர மடத்தில் நடைபெற்ற சம்பவங்கள், ஜெயேந்திரரின் செயல்பாடுகள், அவருடனான மோதல் ஆகியவைகுறித்து அவர் சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்ததாகத் தெரிகிறது.
அவர் வாக்குமூலம் அளித்தபோது அறைக்குள் வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. ராதாகிருஷ்ணனின்வாக்குமூலத்தை நீதிபதியே தனது கைப்பட பதிவு செய்து கொண்டார்.