சென்னையை மூடிய போகி புகை!
சென்னை:
போகிப் பண்டிகையையொட்டி இன்று அதிகாலை பழைய பொருட்களை போட்டு கொளுத்தியதால் ஏற்பட்டபுகையும், கடும் பனியும் சேர்ந்து சென்னை நகரில் பெரும் புகை மூட்டத்தை ஏற்படுத்தின.
பொங்கள் திருநாள் நாளை கொண்டாடப்படவுள்ளது. அதற்கு முன்பாக இன்று போகிப் பண்டிகைகொண்டாடப்பட்டது.
பழைய கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கேற்ப தமிழக வீடுகளில் இன்று பழைய பொருட்களை போட்டுகொளுத்தினர்.
சென்னை நகரில் அதிகாலையில் இந்த போகிப் பண்டிகை கொண்டாடப்படும். அந்த வகையில் தங்களதுவீடுகளில் உள்ள பழைய பொருட்களை பொது மக்கள் இன்று காலை தீயிட்டுக் கொளுத்தினர்.
டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கக் கூடாது என்று போலீஸார் தடை விதித்திருக்கும் நிலையில் அவற்றைஎரித்த 550 பேரை சென்னை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 100 முதல் ரூ. 500 வரைஅபராதம் வசூலிக்கப்பட்டது.
போகியால் ஏற்பட்ட புகையும், கடும் பனியும் சேர்ந்து சென்னை நகர் முழுவதும் காலை 7 மணி வரை புகைமண்டலமாகக் காட்சி அளித்தது.