கடலூர் மக்களுக்கு கை கொடுக்கும் சின்னப்பிள்ளை!
கடலூர்:
![]() |
கடலூரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதுரையைச் சேர்ந்த சமூக சேவகி சின்னப்பிள்ளை தனது குழுவினருடன் சென்றுஉதவிகள் செய்து வருகிறார்.
மதுரையைச் சேர்ந்த சின்னப்பிள்ளை களஞ்சியம் என்ற சிறு சேமிப்பு இயக்கத்தை நிறுவியவர், மத்திய அரசின் சக்தி புரஸ்கார் விருதைஅப்போதைய பிரதமர் வாஜ்பாயிடமிருந்து பெற்றவர்.
சின்னப் பிள்ளையின் சேவையைக் கேட்டு பிரமித்த வாஜ்பாய் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். அத்தகைய பெருமைபெற்ற சின்னப்பிள்ளை கடலூரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தற்போதும முகாமிட்டு நிவாரணப் பணிகளை செய்துவருகிறார்.
அவர் கூறுகையில், எங்களது களஞ்சியம் இயக்க அறக்கட்டளை மூலம் கடலூர், குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை ஆகிய கடலோரபகுதிகளில் உள்ள 10 கிராமங்களில் ரூ. 12 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறோம்.
களஞ்சியம் இயக்கத்தைச் சேர்ந்த 15 பெண்கள் என்னுடன் வந்துள்ளனர். எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த அனைவரும் தலா ரூ. 200 ஒதுக்கிரூ. 4.4 கோடியை திரட்டவுள்ளோம். அந்த நிதியை சுனாமி நிவாரணத்துக்காக செலவிட இருக்கிறோம்.
இந்த ரூ. 4.4 கோடியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களை தத்தெடுத்த மீண்டும் அவற்றை வாழத் தகுந்த இடமாக மாற்றுவதோடு, வேலைவாய்ப்புகளையும் உருவாக்கித் தரவுள்ளோம்.
எங்களால் முடிந்த அனைத்து சேவைகளையும் இப்பகுதி மக்களுக்காக செய்யவுள்ளோம் என்றார் சின்னப்பிள்ளை.













Click it and Unblock the Notifications