சங்கரராமன் கொலையாளிகள் மீது பாயும் குண்டர் சட்டம்
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள கதிரவன், சின்னா உள்ளிட்ட 8 பேர் விரைவில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ளேதள்ளப்படலாம் என்று தெரிகிறது.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், அப்பு உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில்ஜெயேந்திரர் மட்டும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். மற்ற அனைவரும் சிறையில் உள்ளனர்.
இவர்களில் 8 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
கூலிப்படையைச் சேர்ந்த கதிரவன் (இவன் அப்புவின் டிரைவர்-கம்-அடியாள்), சின்னா, மாட்டு பாஸ்கர், அனில் குமார், மீனாட்சி சுந்தரம்,குமார், இன்னொரு குமார், அம்பி என்ற அம்பிகாபதி ஆகிய 8 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படக் கூடும் என்றுதெரிகிறது.
இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதி கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு போலீஸார்விண்ணப்பித்துள்ளனர்.
வழக்கு போகிற போக்கைப் பார்த்தால் ஜெயேந்திரரையே கூட குண்டர் சட்டத்தில் தமிழக அரசு கைது செய்தாலும்ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்தச் சட்டத்தின் கீழ் கைதானால் 1 வருடத்துக்கு ஜாமீன் கூட கிடைக்காது.












Click it and Unblock the Notifications