For Quick Alerts
For Daily Alerts
Just In
சுனாமி: அந்தமானுக்கு திமுக ரூ. 10 லட்சம் நிதியுதவி
சென்னை:
அந்தமான் பகுதியில் நிவாரணப் பணிகளுக்காக திமுக சார்பில் ரூ. 10 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்,
சுனாமியால் பாதிக்கப்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த மக்களின் நிவாரணப் பணிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில்ரூ. 10 லட்சம் வழங்கப்படுகிறது.
இதற்கான காசோலையை மத்திய உள்துறை இணை அமைச்சர் எஸ்.ரகுபதி, அந்தமான் பகுதி திமுக அமைப்பாளர் மதிவாணன்,போர்ட்பிளேர் நகராட்சித் தலைவர் இரா.கிருஷ்ணன் ஆகியோர் அந்தமான் துணை நிலை ஆளுநரிடம் ஒப்படைப்பார்கள் என்றுகூறியுள்ளார்.
சுனாமி நிவாரணத்துக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ரூ. 1 கோடி, பிரதமர் மன்மோகன் சிங்கிடம்ரூ. 20 லட்சம், முதல்வர்நிவாரண நிதிக்கு ஸ்டாலின் மூலம் ஜெயலலிதாவிடம் ரூ. 21 லட்சம் என மொத்தம் திக சார்பில் இதுவரை ரூ 1 கோடியே 41 லட்சம்வழங்கியுள்ளது.
Comments
Story first published: Saturday, January 15, 2005, 5:30 [IST]