அப்புவின் சிறை காவல் 31ம் தேதி வரை நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் கூலிப் படைத் தலைவன் அப்புவின் சிறைக் காவல் வருகிற 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கூலிப் படைத் தலைவன் அப்புவின் சிறைக் காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து இன்று அவன் காஞ்சிபுரம் முதலாவதுகுற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.
அப்போது அப்புவின் சிறைக் காவலை வருகிற 31ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தமராஜ் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அப்புகடலூர் மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டான்.
சுந்தரசே அய்யர் ஜாமீன் மனு:
இதற்கிடையே சங்கர மட கணக்குகளை திருத்தி எழுதியதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர் மற்றும்காலடி விஸ்வநாத அய்யர் ஆகிய இருவரும் இன்று ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications