ஜல்லிக்கட்டு: காளைகள் குத்தி 5 பேர் பலி
மதுரை:
மதுரை அலங்காநல்லூர் மற்றும் சிவகங்கை மாவட்டம் சிறாவயல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் மாடுகள்முட்டியதில் 5 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பொங்கல் விழாவின் இறுதி நாளான நேற்று உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டுநிகழ்ச்சி நடத்தப்பட்டது. வழக்கம் போல மிகப் பிரமாண்டமான அளவில் கூட்டம் கூடியிருக்க ஜல்லிக்கட்டுநிகழ்ச்சி நடந்தது.
திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச்சேர்ந்த 350க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் கலந்து கொண்டன.
முதலில் முனியாண்டி கோயில் காளை திறந்து விடப்பட்டது. கோயில் காளை என்பதால் அதை யாரும்பிடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து பிற காளைகள் திறந்து விடப்பட்டன. சீறிப் பாய்ந்த காளைகளைப் பிடிக்கமுறுக்கேறிய இளைஞர்கள் முண்டியடித்தனர்.
பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்த காளைகள் ஒவ்வொன்றாகத் திறந்து விடப்பட்டன. பல காளைகளையாராலும் பிடிக்கவே முடியாத அளவுக்கு திமிறி ஓடி, போக்குக் காட்டிச் சென்றன.
இந்த வீர விளையாட்டில் அலங்காநல்லூரைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 19), எர்ணாம்பட்டியைச் சேர்ந்தசுதாகர் (வயது 22), மாரநாட்டைச் சேர்ந்த சின்னான் (வயது 28) ஆகியோர் காளைகள் குத்தியதில் இறந்தனர்.200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மதுரை அரசு ராஜாஜிமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதேபோல சிவகங்கை மாவட்டம் சிறாவயல் பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 2 பேர் மாடுகள்குத்தியதில் இறந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.