சங்கர மடத்தை அரசியலாக்கும் பாஜக: வாசன்
சென்னை:
சங்கர மட விவகாரத்தை அரசியலாக்க பாஜக முயல்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சங்கரராமன் கொலை வழக்கை பயன்படுத்தி சங்கர மடத்தை தமிழக அரசுகையகப்படுத்தாது என்று முதல்வர் ஜெயலலிதா தெளிவாகக் கூறியுள்ளார். அவரது பேச்சில் மாற்றம் இருக்காது என்று நம்புகிறேன்.
மத உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் செயல்படக் கூடாது, சட்டப்படி கடமையாற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு பிரதமர்மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
சங்கர மட விவகாரத்தை அரசியலாக்கி அதன் மூலம் அரசியல் அரங்கில் மறு வாழ்வு பெற பாஜகவினர் துடிக்கிறார்கள். ஆனால்அவர்களது குரலை நம்ப மக்கள் தயாராக இல்லை என்றார் வாசன்.
முன்னதாக ஆந்திர மாநில காங்கிரஸ் சார்பில் சுனாமியால் பாதித்த பகுதி மக்களுக்காக 2 லாரிகள் நிறைய நிவாரணப் பொருட்களை வாசன்அனுப்பி வைத்தார். முதல் கட்டமாக 25 ஆயிரம் பைகள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் 20 ஆயிரம் நிவாரணப் பொருட்கள் அடங்கியபைகள் இன்னும் 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படவுள்ளன.