விஜயேந்திரர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை செங்கல்பட்டு செசன்ஸ் நீதிமன்றம்வருகிற 19ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
சங்கரராமன் கொலை வழக்கில் கடந்த 10ம் தேதி விஜயேந்திரரை தனிப்படைப் போலீசார் கைது செய்தனர். அவரை 15 நாட்கள் நீதிமன்றக்காவலில் வைக்க காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தமராஜன் உத்தரவிட்டார். பின்பு விஜயேந்திரர் சென்னை மத்தியசிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி கடந்த 12ம் தேதி செங்கல்பட்டு செசன்ஸ் நீதிமன்றத்தில் விஜயேந்திரர் சார்பில் மனுத் தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை 17ம் தேதி (இன்று) நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.
அதன்படி விஜயேந்திரர் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் துல்சி நீதிமன்றத்தில்ஆஜராகததால் மனு மீதான விசாரணையை வருகிற 19ம் தேதிக்கு (புதன்கிழமை) ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
போலீஸ் காவல்:
இந் நிலையில் விஜயேந்திரர், ரகு ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் தனிப்படைபோலீஸார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications