3 நாட்களில் குற்றப் பத்திரிக்கை: கூடுதல் எஸ்பி
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் வரும் 21ம் தேதி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிடும் என காஞ்சிபுரம் தனிப்படையின் கூடுதல்எஸ்.பி. சக்திவேலு கூறியுள்ளார்.
இது குறித்து ஏற்கனவே அரசல் புரசலாக செய்திகள் வந்தன. இப்போது விசாரணை அதிகாரியான சக்திவேலுவே திட்டவட்டமாக இச்செய்தியை உறுதி செய்துள்ளார்.
வழக்கு விசாரணை கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதாகவும், இதனால் அடுத்த 3 நாட்களில் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்ய நாங்கள் தயார் என்றும் நிருபர்களிடம் இன்று சக்திவேலு தெரிவித்தார்.
இந்த வழக்கில் கடந்த நவம்பர் 11ம் தேதி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து இதுவரை 26 பேர் புயல் வேகத்தில்கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையும் மிக வேகமாக நடந்து வருகிறது.
இவர்களில் 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. இந்த குண்டர் சட்டப் பட்டியலில் ரகுவும் விரைவில் இடம் பெறுவது உறுதிஎன்கிறது தனிப்படை போலீஸ் வட்டாரம்.












Click it and Unblock the Notifications