விழுப்புரம் அருகே ஜாதி மோதல்
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே இரு ஜாதியினரிடையே இடையே ஏற்பட்ட பெரும் மோதலில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
கழிஞ்சாங்குப்பம் என்ற கிராமத்தில் பெண்ணையாற்றில் படகுப் போட்டி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள்கலந்து கொண்டனர்.
அப்போது பாண்டிச்சேரிக்குட்பட்ட கரையான்புதூரைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த சிலர் கழிஞ்சாங்குப்பம் கிராமத்தைச்சேர்ந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்களை கேலி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கரையான்புதூருக்குச் சென்ற கழிஞ்சாங்குப்பம் கிராமத்தினர் இதுகுறித்து அந்த ஊர்ப் பெரியவர்களிடம் முறையிட்டுள்ளனர்.இதுதொடர்பாக இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறி இரு தரப்பினருரம் அரிவாள், கம்புகளால் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து அங்குபோலீஸ் படை விரைந்து வந்தது. அவர்களை கலைந்து போகுமாறு போலீஸார் கூறியும் கேட்காததால், தடியடி நடத்தி போலீஸார்அவர்களைக் கலைத்தனர்.
இந்த மோதலில் 4 பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் நடந்த கிராமத்திலும் கழிஞ்சாங்குப்பம் கிராமத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications