ஜார்ஜ் புஷ் 2வது முறையாக இன்று அதிபர் பதவி ஏற்பு
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக ஜார்ஜ் புஷ் இன்று இரண்டாவது முறையாக பதவியேற்கிறார். இதனையொட்டி அமெரிக்காவில் 3 நாள்கொண்டாட்டம் நடைபெறுகிறது.
அதிபராக புஷ் பதவியேற்பதையொட்டி அமெரிக்க அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு புஷ் மரியாதை செலுத்தினார். நேற்று வாணவேடிக்கைகளும், இசைநிகழ்ச்சிகளும் தொடங்கின. இன்று பதவியேற்கும் முன்பு அதிபர் புஷ் பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பதவியேற்பு விழா முடிந்தபின்பு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்தளிக்கிறார். விழாவையொட்டி பலத்த பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மன்மோகனுடன் பேச்சு:
இந் நிலையில் சுனாமி பாதித்த நாடுகளுக்கு இந்தியா அளித்த உடனடி நிவாரண உதவிகளை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் துறை செயலாளர் ஸ்காட் மெக்கெல்லன் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஜார்ஜ் புஷ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சுனாமியால்பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இந்தியா அளித்த உடனடி நிவாரண உதவிகள் குறித்து அமெரிக்காவின் பாராட்டுதலைத்தெரிவித்தார்.
இருதரப்பு உறவு வலுப்படும் வகையில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து உதவுவது குறித்துஇருநாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர்.
இருநாடுகளுக்கு இடையே பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதுகுறித்தும் ஆலோசனை நடத்தினர் என்று கூறினார்.