ஜெயேந்திரர்: போராட்டம் செய்த திருநாவுக்கரசர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Jeyandrarவிஜயேந்திரர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், சங்கராச்சாரியார்கள் மீதான வழக்குகளை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரியும் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த ஆர்பாட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்திருந்தனர். இருப்பினும் திட்டமிட்டபடி சென்னை மாவட்ட ஆட்சியர்அலுவலகம் முன்பு பாஜகவினர் கூடினர். முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், தமிழக பாஜக பொதுச் செயலாளர்குமாரவேலு, பாஜக பிரமுகர்கள் லட்சுமணன், வாழப்பாடி ராமசுகந்தன் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.

விஜயேந்திரரை விடுதலை செய், சங்கர மடத்தை அவமானப்படுத்தாதே, ஜெயேந்திரர் மீதான வழக்குகளை வேறு மாநிலத்துக்குமாற்று ஆகிய கோஷங்களை எழுப்பினார்கள். திருநாவுக்கரசர் பேசுகையில்,

சங்கர மடத்தை அவமானப்படுத்தும் விதமாகவே தமிழக அரசின் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஜெயேந்திரர் மீதானகுற்றச்சாட்டுக்களுக்கு வலுவான ஆதாரம் எதையும் தாக்கல் செய்யவில்லை என்று தமிழக அரசை உச்ச நீதிமன்றம்கண்டித்துள்ளது.

அதனால் தான் தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறோம். மற்ற மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிவழங்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மடத்திற்கு எதிராக தமிழக அரசு செயல்படுவதால்தான் வழக்குகளை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோருகிறோம். மத்திய அரசுஇதை கண்டு கொள்ளாமல் இருக்கிறது. சங்கர மடம் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெறுமாறு மாநில அரசுக்குமத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

அப்போது போலீஸார் விரைந்து வந்து திருநாவுக்கரசர் உள்ளிட்ட 200 பேரைக் கைது செய்து, முத்தியால்பேட்டை காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+