மடத்துக்கு திரும்ப ஜெயேந்திரருக்கு தடை நீங்கியது
காஞ்சி:
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் ஜெயேந்திரர் சங்கர மடத்திற்குத் திரும்பதடை நீங்கியுள்ளது.
இந்த வழக்கில் ஜெயேந்திரருக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் வரை மடத்துக்குச்செல்லக் கூடாது என்று நிபந்தனை விதித்திருந்தது. இதனால் அவர் வேலூர் அருகே கலவையில் உள்ள காஞ்சி மடத்தில்தங்கியுள்ளார்.
இப்போது குற்றப் பத்திரிக்கை தாக்கலாகிவிட்டாதால் அவர் சங்கர மடத்திற்குத் திரும்பலாம். ஆனால், அவர் எப்போதுதிரும்புவார் என்று தெரியவில்லை.
இது குறித்து எஸ்பி பிரேம்குமாரிடம் கேட்டபோது, இந்த விஷயத்தில் நான் இப்போது எதுவும் சொல்ல முடியாது. எல்லாம்சட்டப்படி தான் நடக்கும் என்றார்.
கருத்து கூற சங்கர மடம் மறுப்பு:
இதற்கிடையே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது குறித்து கருத்து கூற சங்கர மட நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.
நிருபர்கள் திரும்ப திரும்ப கேள்விகள் கேட்டும், நிர்வாகிகள் யாரும் வாய் திறக்கவில்லை. அதேபோல் ஜெயேந்திரர் எப்போதுகாஞ்சி மடத்திற்கு திரும்புவார் என்பதும் தங்களுக்குத் தெரியாது என்று கூறி விட்டனர்.
இன்று பார்வையாளர்கள் யாரும் ஜெயேந்திரரை சந்திக்க வராததால், கலவை மடத்தில் பெரும் அமைதி காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications