ஸ்ரீநிவாச்சார் கொலைக்கு கந்து வட்டி காரணமா?
காஞ்சிபுரம்:
| காஞ்சிபுரத்தில் உள்ள உத்தராடி ஸ்ரீவைஷ்ணவ மடத்தின் மேலாளர் ஸ்ரீநிவாச்சார் கந்து வட்டி தொழிலில் ஈடுபட்டிருந்ததால் அதன்காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற ரீதியில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீநிவாச்சார் (வயது40) நேற்று முன்தினம் இரவில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைப் பிடிக்க3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. |
இது தெரிந்து பாட்னா தலைமை மட நிர்வாகிகள் சிலர் காஞ்சிபுரம் வந்து ஸ்ரீநிவாச்சாரைக் கண்டித்துள்ளனர். மேலும் வீட்டைவிற்ற பணத்தையும் கேட்டிருக்கின்றன்ர். இதையடுத்தே ஸ்ரீநிவாச்சார் பாட்னா திரும்ப திட்டமிட்டிருக்கிறார். (தாயார்இறந்துவிட்டதால் அவர் ஊருக்குச் செல்ல இருந்ததாக இதே மடத்தின் ஸ்ரீபெரும்புதூர் கிளை மேலாளர் ராமாயன்ஜி கூறியதுகுறிப்பிடத்தக்கது)
ஊர் திரும்பும் முன்பு வட்டிக்கு கொடுத்தவர்களிடம் பணத்தை ஸ்ரீநிவாச்சார் திரும்பக் கேட்டிருக்கலாம் என்றும் அதன் காரணமாகஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீஸார் கருதுகின்றனர்.
இது தொடர்பாக இதுவரை 15 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் தேனம்பாக்கம் மற்றும் நாசரேத்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள மடத்துக்குச் சொந்தமான விவசாய நிலத்தில்வேலை பார்ப்பவர்களிடமும் மடத்திற்கு அருகே வசிப்பவர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லா கோணங்களிலும் இந்த வழக்கை விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.













Click it and Unblock the Notifications